பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு அரசு

×

18 வயதுக்கு முன் எந்த குழந்தைக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது

(18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான 24x7 கட்டணமில்லா ஹெல்ப்லைன்)

  • நீங்கள் அச்சுறுத்தப்பட்டதாகவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவோ அல்லது துன்புறுத்தப்படுவதையோ உணர்ந்தால் - உணர்ச்சி ரீதியாக, உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக
  • நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால்
  • குழந்தைத் திருமணம் நடப்பது குறித்து உங்களுக்குத் தெரிந்தால், அதைப் பற்றி தெரிவிக்க வேண்டும்
  • தேர்வுகள் அல்லது உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டால்
  • நீங்கள் ஒரு தொழில் ஆலோசகரிடம் பேச விரும்பினால்
  • கல்விச் சான்றிதழ்களில் சந்தேகம் இருந்தால்
பள்ளி சுவரொட்டிகளை இங்கே பதிவிறக்கவும்

*அழைப்பாளர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்

A
school

மதிப்பீட்டுப் புலம்

ஒவ்வொரு மாணவரின் கற்றல் அடைவுகளை, தகுந்த கால இடைவெளியில்‌ உயர்‌ தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Labs) வாயிலாக அளவிடவும்‌, தரவுகளின் அடிப்படையில்‌ பதிவு செய்யவும்‌, கற்றல்‌ கற்பித்தல்‌ தரத்தை உறுதி செய்யவும்‌, அதனடிப்படையில்‌ உகந்த குறைதீர்‌ உத்திகளை உருவாக்கிக் கற்றல்‌ கற்பித்தலின்‌ தரத்தை மேம்படுத்தவும்‌ மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தில்‌ மதிப்பீட்டுப்புலம் ரூ.40 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ உருவாக்கப்படும்‌ என்று  2021-2022 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பாக மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் அறிவித்தார். இதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான அரசாணையை (எண்.155, பள்ளிக்கல்வித் (ERT) துறை, நாள் 16.11.2021) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Search By:

Chapter Wise Year Wise