இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 45 வது பிரிவு, அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள், அனைத்து குழந்தைகளுக்கும் 14 வயது நிறைவடையும் வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வியை மாநிலங்கள் வழங்குவதை வலியுறுத்துகிறது.
86வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2002 மூலம் 21A பிரிவு சேர்க்கப்பட்டு, 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கற்கும் உரிமை என்பது அடிப்படை உரிமை என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி என்பது 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பெறும் கட்டாயக் கல்வியின் முதல் நிலையைக் குறிக்கிறது. இது பல்வேறு பாடங்களின் அடிப்படை புரிதலை மாணவர்களுக்கு வழங்குகிறது. மேலும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் சிக்கலான விசயங்களைத் தீர்ப்பதற்கான சிந்தனைத் திறன்களை வளர்க்கிறது.
6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி என்ற நோக்கத்துடன் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றம் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009 (2009ஆம் ஆண்டின் 35 ஆம் சட்டம்)ஐ இயற்றியது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ஐ நடைமுறைப்படுத்தவும், தொடக்கக் கல்வியின் மூலம் கல்வி இலக்குகளை அடையவும், தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது
அனைவரும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திறன்களை அடைவதற்கென எண்ணும் எழுத்தும் இயக்கம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும். 1-3 வகுப்புகளில் படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவுத் திறன்களைப் பெறுவதை உறுதி செய்வதே இவ்வியக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும். ஆசிரியர்களுக்கென தலைமைப் பண்பு பயிற்சி, ஆசிரியர்களுக்கான கையேடு, மாணாக்கரின் நிலைக்கேற்ற கற்றல் உபகரணங்கள் ஆகியன இவ்வியக்கத்தின் முதன்மை செயல்பாடாக அமையும். ஒவ்வொரு குழந்தையின் அடைவுத் திறனும் தனித்தனியே கண்காணிக்கப்படும். இந்நிதியாண்டில் எண்ணும் எழுத்தும் இயக்கத்திற்கென ரூ.66.70 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
நோக்கம் : 3+ முதல் 9+ வயதுடைய குழந்தைகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையில் கல்வி பயில்வதற்கு பள்ளி வசதி ஏற்படுத்துதல் பயனாளிகள் : பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை / சங்கம் விண்ணப்பிக்க வேண்டிய அலுவலர் : சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் தகுதி, தேவையான ஆவனங்கள், குறைதீர் செயல்முறைகள் ஆகியன குறித்த கூடுதல் தகவல்கள் பெற இங்கே சொடக்கவும்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 தமிழகத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப்பிரிவு 12(1)(c) இன்படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை நுழைவுநிலை வகுப்பில் அதாவது எல்.கே.ஜி. / முதல் வகுப்பில் சேர்க்கை செய்வது சார்ந்து தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. 2017-18ஆம் ஆண்டு முதல் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் பள்ளிகளில் சேர்க்கைக்கு பெற்றோர் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பங்களுக்கு சேர்க்கை வழங்க வேண்டிய பொறுப்பு பள்ளிகளைச் சார்ந்ததாகும். வட்டார மற்றும் மாவட்ட அளவில் உள்ள கல்வி அலுவலகங்களில் கட்டணமில்லாமல் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட காலியிடங்களை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் விண்ணப்பதாரர் / பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர். முன்னுரிமைப் பிரிவினரான ஆதரவற்ற மற்றும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாற்றுப்பாலினத்தவர், துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்கள் முதலில் பரிசீலனை செய்யப்பட்டு குலுக்கல் நடத்தப்படுவதற்கு முன்னர் அவர்களுக்குச் சேர்க்கை வழங்கப்படும். 2019-20ஆம் ஆண்டில், 76,927 வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர். விண்ணப்பிப்பதற்கான அத்தியாவசிய ஆவணங்கள்