மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாநிலத்தின் உயரிய கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் பல்வேறு கல்விச் செயல்பாடுகளான கலைத்திட்டம், தயாரித்தல், பாடநூல் எழுதுதல், பாடநூல்களை மீளாய்வு செய்தல், ஆண்டு வரவு செலவு திட்டமிடுதல், ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சிகளை வடிவமைத்து வழங்குதல், மாநில அளவிலான அடைவுச் சோதனைகளை நடத்துதல், தேசிய அடைவுச் சோதனைகளை நடத்துதல், கொள்குறி வினாக்களைத் தயாரித்தல் போன்றவற்றில் ஆண்டு முழுவதும் ஈடுபடுகிறது.ஆசிரியர்களது திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு பல்வேறு தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வடிவமைத்து வழங்கி வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தையும் நவீன கண்டுபிடிப்புகளையும், கற்றல் கற்பித்தல் உத்திகளிளையும் ஒருங்கிணைத்து மாணவர்கள் தொழில்நுட்ப சவால்களைச் சமாளிக்கவும் உதவுகிறது. மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தெரிவுகள் சார்ந்த கலந்தாலோசனையையும் இந்நிறுவனம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் கல்விசார் பிரச்சனைகள் பற்றி செயல் ஆராய்ச்சிகளையும் கல்வி ஆராய்ச்சிகளையும் செய்ய மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மூலம் வழிகாட்டுகிறது. இவ்வாய்வுகள் கொள்கை முடிவுகள் எடுக்கும் உயர் அலுவலர்களுக்கு தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுத்து மாநிலம் முழுவதும் கற்றல் விளைவுகளின் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க உதவி வருகின்றன.
கற்றல் விளைவுகளில் கவனம் செலுத்தும் கல்விமுறையை உருவாக்கி, பலதரப்பட்ட முழுமையான, மகிழ்ச்சிகரமான கற்றல் அடிப்படையிலான பலதரப்பட்ட கற்பித்தல் உத்திகளையும் மாற்று கற்றல் உத்திகளையும் உருவாக்கி, உயர்தர சிந்திக்கும் ஆற்றலை தூண்டும் மதிப்பீட்டு உத்திகள் மற்றும் கணினி வழிக் கற்றல் முறைகளையும் மாணவர்களுக்கு வழங்கி கணினி யுகத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக முறியடிக்க மாணவர்களது திறன்களை வளர்த்தல்.
கால அளவு : அக்டோபர் 2021 முதல் இன்று வரை இடம் : தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள் பயனாளர்கள்: 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள்/அதிகாரிகள். நோக்கம்:
பயிற்சியின் பெயர்: மாநில அளவிலான ஆசிரியர்களுக்கான ஆங்கில பேச்சு பயிற்சி கால அளவு : 2 நாட்கள் (30.05.2022, 31.05.2022) இடம் : https://drive.google.com/file/d/1VeKHW5MUd7rP1MT0Rx5pG406zD3PIJh9/view?usp=sharing அக்ஷயா, பொறியியல் கல்லூரி, கிணத்து கதவு, கோயம்புத்தூர் பயனாளர்கள்: ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பயனாளிகள்: 1 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் நோக்கம்:
எண்ணும் எழுத்தும் – ஒரு கண்ணோட்டம் தொடக்க வகுப்புகளின் கற்றல், கற்பித்தலின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாவது, 2025ஆம் கல்வியாண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மூன்றாம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள், பொருள் புரிந்து படிக்கவும் எழுதவும் அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதாகும். கரோனா பெருந்தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் களைவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதைநோக்கி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைமையில் எண்ணும் எழுத்தும் திட்டமானது, 2022-23ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. எண்ணும் எழுத்தும் அறிமுகப் பயிற்சி எண்ணும் எழுத்தும் திட்டப் பரவலாக்கத்தின் ஒரு கூறாக ஆசிரியர்களுக்கான அறிமுகப் பயிற்சிகள் மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் நடத்தப்பட்டன. இப்பயிற்சிகள் இரண்டு முக்கிய நோக்கங்களை மையப்படுத்தின.
நிகழ்ச்சியின் நோக்கம்:
நிகழ்ச்சியின் நோக்கம்:
நிகழ்ச்சியின் நோக்கம்:
நிகழ்ச்சியின் நோக்கம்:
நிகழ்ச்சியின் நோக்கம்:
மாணவர்கள் 5 பாடங்களிலும் உயர் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளை வெளிப்படுத்தினர்.
பயிற்சியின் நோக்கங்கள்:
நோக்கம்: எதிர்கால தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் பயனாளர்கள்: 12ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்ற பொதுப் பிரிவினரும், 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்ற BC/MBC/SC/ST பிரிவினரும் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் ஆவர். நடப்பு கல்வியாண்டின் ஜூலை 31 அன்று, விண்ணப்பதாரரின் வயது, பொதுப்பிரிவனருக்கு 30 வயதுக்கு மிகாமலும், SC/ST பிரிவினருக்கு 35 வயதுக்கு மிகாமலும், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: விண்ணப்பதாரர் தங்களுக்கு அருகில் உள்ள கீழ்க்காணும் நிறுவன முதல்வர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் / அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் / ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் / அரசு நிதி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் / சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் / ஆங்கிலோ- இந்தியன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம். தகுதி, ஆவணங்கள் மற்றும் குறை-தீர்வுகள் பற்றிய மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.
நோக்கம்: எதிர்கால உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் பயனாளர்கள்: 12ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்ற பொதுப் பிரிவினரும், 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்ற BC/MBC/SC/ST பிரிவினரும் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் ஆவர். நடப்பு கல்வியாண்டின் ஜூலை 31 அன்று, விண்ணப்பதாரரின் வயது, பொதுப்பிரிவனருக்கு 30 வயதுக்கு மிகாமலும், SC/ST பிரிவினருக்கு 35 வயதுக்கு மிகாமலும், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: விண்ணப்பதாரர் தங்களுக்கு அருகில் உள்ள உடற்கல்வியியல் நிறுவன முதல்வர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். தகுதி, ஆவணங்கள் மற்றும் குறை-தீர்வுகள் பற்றிய மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.