மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாநிலத்தின் உயரிய கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் பல்வேறு கல்விச் செயல்பாடுகளான கலைத்திட்டம், தயாரித்தல், பாடநூல் எழுதுதல், பாடநூல்களை மீளாய்வு செய்தல், ஆண்டு வரவு செலவு திட்டமிடுதல், ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சிகளை வடிவமைத்து வழங்குதல், மாநில அளவிலான அடைவுச் சோதனைகளை நடத்துதல், தேசிய அடைவுச் சோதனைகளை நடத்துதல், கொள்குறி வினாக்களைத் தயாரித்தல் போன்றவற்றில் ஆண்டு முழுவதும் ஈடுபடுகிறது.ஆசிரியர்களது திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு பல்வேறு தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வடிவமைத்து வழங்கி வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தையும் நவீன கண்டுபிடிப்புகளையும், கற்றல் கற்பித்தல் உத்திகளிளையும் ஒருங்கிணைத்து மாணவர்கள் தொழில்நுட்ப சவால்களைச் சமாளிக்கவும் உதவுகிறது. மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தெரிவுகள் சார்ந்த கலந்தாலோசனையையும் இந்நிறுவனம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் கல்விசார் பிரச்சனைகள் பற்றி செயல் ஆராய்ச்சிகளையும் கல்வி ஆராய்ச்சிகளையும் செய்ய மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மூலம் வழிகாட்டுகிறது. இவ்வாய்வுகள் கொள்கை முடிவுகள் எடுக்கும் உயர் அலுவலர்களுக்கு தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுத்து மாநிலம் முழுவதும் கற்றல் விளைவுகளின் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க உதவி வருகின்றன.
கற்றல் விளைவுகளில் கவனம் செலுத்தும் கல்விமுறையை உருவாக்கி, பலதரப்பட்ட முழுமையான, மகிழ்ச்சிகரமான கற்றல் அடிப்படையிலான பலதரப்பட்ட கற்பித்தல் உத்திகளையும் மாற்று கற்றல் உத்திகளையும் உருவாக்கி, உயர்தர சிந்திக்கும் ஆற்றலை தூண்டும் மதிப்பீட்டு உத்திகள் மற்றும் கணினி வழிக் கற்றல் முறைகளையும் மாணவர்களுக்கு வழங்கி கணினி யுகத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக முறியடிக்க மாணவர்களது திறன்களை வளர்த்தல்.
கால அளவு : அக்டோபர் 2021 முதல் இன்று வரை
இடம் : தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள்
பயனாளர்கள்: 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள்/அதிகாரிகள்.
நோக்கம்:
பயிற்சியின் விளைவுகள்:
சிறப்பம்சங்கள்:
மாணவர்கள் தங்கள் உயர்கல்வி கனவுகளைத் தொடர பல்வேறு உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்க உதவுவது குறித்து உதவித்தொகை இணைய முகப்பு மூலம் அறிகின்றனர்.
பயிற்சியின் பெயர்:
மாநில அளவிலான ஆசிரியர்களுக்கான ஆங்கில பேச்சு பயிற்சி
கால அளவு :
2 நாட்கள் (30.05.2022, 31.05.2022)
இடம் : https://drive.google.com/file/d/1VeKHW5MUd7rP1MT0Rx5pG406zD3PIJh9/view?usp=sharing
அக்ஷயா, பொறியியல் கல்லூரி, கிணத்து கதவு, கோயம்புத்தூர்
பயனாளர்கள்:
ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள்
பயனாளிகள்:
1 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்கள்
நோக்கம்:
பயிற்சியின் விளைவுகள்: (Outcomes of Training)
சிறப்பம்சங்கள்: (Highlights)
பின்னூட்டம் (Feedback)
கருத்துகள்:
எண்ணும் எழுத்தும் – ஒரு கண்ணோட்டம்
தொடக்க வகுப்புகளின் கற்றல், கற்பித்தலின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாவது, 2025ஆம் கல்வியாண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மூன்றாம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள், பொருள் புரிந்து படிக்கவும் எழுதவும் அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதாகும்.
கரோனா பெருந்தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் களைவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதைநோக்கி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைமையில் எண்ணும் எழுத்தும் திட்டமானது, 2022-23ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
எண்ணும் எழுத்தும் அறிமுகப் பயிற்சி
எண்ணும் எழுத்தும் திட்டப் பரவலாக்கத்தின் ஒரு கூறாக ஆசிரியர்களுக்கான அறிமுகப் பயிற்சிகள் மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் நடத்தப்பட்டன. இப்பயிற்சிகள் இரண்டு முக்கிய நோக்கங்களை மையப்படுத்தின.
மாநில அளவிலான அறிமுகப் பயிற்சி
எண்ணும் எழுத்தும் மாநில அளவிலான பயிற்சி, 23.05.2022 முதல் 28.05.2022 வரை ஆறு நாள்கள் மதுரையில் உள்ள பில்லர் மையத்தில், நடைபெற்றது. இப்பயிற்சி, மாநில வளக்குழுவில் உள்ள பாட வல்லுநர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கருத்தாளர்களாகக் கொண்டு நடத்தப்பட்டது. பயிற்சிக்கான மாதிரிக் காணொலிகளையும் கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகளையும் பயிற்சி அமர்வுக்கான திட்டங்களையும் எண்ணும் எழுத்தும் திட்ட அடுத்தகட்டப் பயிற்சிக்கான சரிபார்ப்புப் பட்டியலையும் கணினி நழுவங்களையும் மற்றும் பயிற்சிக்குத் தேவையான பிற அனைத்து வளங்களையும் மாநில வளக்குழு உருவாக்கி வழங்கியது.
மாநிலப் பயிற்சியின் தொடக்க உரையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் தேவை, இலக்கு ஆகியவற்றை எடுத்துரைத்து மாற்றத்தை உருவாக்குபவர்களாக ஆசிரியர்கள் மாற வலியுறுத்தினார். ஆங்கில மற்றும் கணக்குப் பாடப் பயிற்சிகளில் எண்ணும் எழுத்தும் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்களான திருமதி. உமா ராமன், முனைவர். இராமானுஜன் ஆகியோர் அறிமுக உரை வழங்கினர். இம் மூன்று சுற்றுப் பயிற்சிகளில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த 380 முதன்மைக் கருத்தாளர்கள் பயிற்சி பெற்றனர்.
மாவட்ட அளவிலான பயிற்சி
மாவட்ட அளவிலான பயிற்சி 2022, சூன் 1, 2 ஆகிய நாள்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. மாநில அளவில் பயிற்சி பெற்ற முதன்மைக் கருத்தாளர்கள், மாவட்ட அளவில் 4900 கருத்தாளர்களுக்குப் பயிற்சி அளித்தனர். எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கம், இலக்கு மற்றும் பாடப்பொருள் ஆகியவை தெளிவாகப் பயிற்சியின் மூலம் எடுத்துரைக்கப்பட்டன.
வட்டார அளவிலான பயிற்சி
வட்டார அளவிலான பயிற்சி, சூன் 6, 2022 முதல் சூன்10, 2022 வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தொடக்க வகுப்பு ஆசிரியர்கள், எண்ணும் எழுத்தும் பயிற்சியைப் பெற்றனர்.
ஒவ்வொரு பயிற்சி அமர்விலும் பயிற்சி அரங்கு வண்ணமயமாக, குழந்தைகளை ஈர்க்கக்கூடியவகையில் எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கென உருவாக்கப்பட்ட மற்றும் பாடம் சார்ந்த பிற கற்றல் பொருள்களைக் கொண்டதாகக் கட்டமைக்கப்பட்டு இருந்தது. இத்தகைய வண்ணமயமான பயிற்சிச் சூழல், பங்கேற்பாளர்களை ஆர்வத்துடன் பயிற்சியில் பங்கேற்கத் தூண்டுவதாக அமைந்து இருந்தது.
நிகழ்ச்சியின் நோக்கம்:
சிறப்பம்சங்கள்:
பயணாளிகள்:
விளைவுகள்:
நிகழ்ச்சியின் நோக்கம்:
சிறப்பம்சங்கள்:
பயன்பெறுவோர்:
கற்றல் விளைவு:
நிகழ்ச்சியின் நோக்கம்:
சிறப்பம்சங்கள்:
நிகழ்ச்சியின் நோக்கம்:
சிறப்பம்சங்கள்:
பயன்பெறுவோர்:
கற்றல் விளைவு:
நிகழ்ச்சியின் நோக்கம்:
சிறப்பம்சங்கள்:
பயன்பெறுவோர்:
கற்றல் விளைவு:
மாணவர்கள் 5 பாடங்களிலும் உயர் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளை வெளிப்படுத்தினர்.
பயிற்சியின் நோக்கங்கள்:
சிறப்பம்சங்கள்:
பயனாளர்கள்:
பயிற்சியின் விளைவுகள்:
பின்னூட்டம்:
குறிப்புகள் (தொடர்புடையகருத்துகள்):
நோக்கம்:
எதிர்கால தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்
பயனாளர்கள்:
12ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்ற பொதுப் பிரிவினரும், 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்ற BC/MBC/SC/ST பிரிவினரும் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் ஆவர். நடப்பு கல்வியாண்டின் ஜூலை 31 அன்று, விண்ணப்பதாரரின் வயது, பொதுப்பிரிவனருக்கு 30 வயதுக்கு மிகாமலும், SC/ST பிரிவினருக்கு 35 வயதுக்கு மிகாமலும், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
விண்ணப்பதாரர் தங்களுக்கு அருகில் உள்ள கீழ்க்காணும் நிறுவன முதல்வர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் / அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் / ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் / அரசு நிதி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் / சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் / ஆங்கிலோ- இந்தியன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்.
தகுதி, ஆவணங்கள் மற்றும் குறை-தீர்வுகள் பற்றிய மேலும் தகவல்களுக்கு
இங்கே சொடுக்கவும்.
நோக்கம்:
எதிர்கால உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்
பயனாளர்கள்:
12ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்ற பொதுப் பிரிவினரும், 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்ற BC/MBC/SC/ST பிரிவினரும் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் ஆவர். நடப்பு கல்வியாண்டின் ஜூலை 31 அன்று, விண்ணப்பதாரரின் வயது, பொதுப்பிரிவனருக்கு 30 வயதுக்கு மிகாமலும், SC/ST பிரிவினருக்கு 35 வயதுக்கு மிகாமலும், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
விண்ணப்பதாரர் தங்களுக்கு அருகில் உள்ள உடற்கல்வியியல் நிறுவன முதல்வர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
தகுதி, ஆவணங்கள் மற்றும் குறை-தீர்வுகள் பற்றிய மேலும் தகவல்களுக்கு
இங்கே சொடுக்கவும்.